வெள்ளி, 1 மார்ச், 2024

இளைய தலைமுறை

சில இளைஞர்களின் வளர்ப்பு எப்படி என்று புகையிரதம் போன்ற பொது இடங்களில் அதுவும் ஐந்தாறு பேர்கள் சேர்ந்து கொண்டால் அவ்வளவுதான்.மற்றவர்களின் சௌகர்யம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்போல.இரவு பதினொரு மணி பத்து நிமிடத்திற்கு திருநெல்வேலியிலிந்து கோவைக்கு ரயில்ஏறினோம் எனக்கும் மனைவிக்கும் மூத்தோர்ஒதுக்கீடில் இரண்டு லோயர்பர்த்கள்.மீதி ஆறிலும் இன்றைய இளைய தலைமுறை உதாரண புருஷர்கள்.வண்டிஏறியதிலிருந்து கரூர் வரை அதாவது காலை நான்கு மணிவரை அவர்களும் தூங்கவில்லை எங்களையும்தூங்கவிடவில்லை போறுத்துப்பார்த்து புகாரும் கொடுத்துப்பார்த்தேன்.இளைய தலைமுறையே வென்றது.
எப்போதாவதுதான் வெளியே வருகிறோம் பேசாமல் எப்படி என்கிறார்கள்.
இறைவா....

வெள்ளி, 2 ஜூன், 2017

மனிதம்.

ஒரு நிமிசம் இதை படிங்களேன். ********************************** நீண்ட தூரமோ"குறைந்த தூரமோ நாம எல்லோரும் தினசரி அல்லது அடிக்கடி பேருந்தில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத அளவுக்கு காலம் அதன் சுழற்சியில் இழுத்து செல்கிறது. எந்த பேருந்தா இருந்தாலும் நாம ஏறியவுடன் இரண்டு பேர் இருக்கையோ"மூன்று பேர் இருக்கையோ காலியாக இருந்தால் சன்னலோரம் உட்கார்ந்து கொண்டு சற்றே ஆசுவாசமாய் கைகால்களை நீட்டி பயணம் செய்வது இயல்பானதுதான். நமது இருக்கைக்கு புதிய பயணி யாரும் வந்தால் நம்மை சரிசெய்து கொண்டு அவரும் ஓரளவு வசதியாக அமர (ஆமாம் இப்போதெல்லாம் இருவர் இருக்கையோ மூவர் இருக்கையோ ஓரளவு வசதியாகத்தான் பயணம் செய்ய முடிகிறது) அல்லது நாம் சிறிது அசந்திருந்தாலும் ஒரு குறல் அல்லது ஒரு தொடுதலில் நம்மை சுதாரித்துக்கொண்டு இடம் அளிப்போம். இதுவும் இயல்பான ஒன்றுதான். ஹலோ!இதோ மேட்டருக்கு வந்துட்டேன். நேற்று ஒரு நகர பேருந்தில் ஏறினேன்"சுமார் 18 கிலோமீட்டர் பயணம். ஏறியவுடன் ஒரு கழுகு பார்வையில் இரண்டு இருக்கைகளில் ஒவ்வொருவர் அமர்திருக்க அதில் ஒரு இருக்கையை தேர்வு செய்து அமர்ந்தேன். ஏற்கனவே இருந்த பயணி விழித்திருந்தார்,நன்கு சுகமாக அமர்ந்திருந்தார்.அதற்கு (ஆமாம் இனி அவர் ர்ர் இல்லை )வயது என் வயது அல்லது ஒன்றிரண்டு கூட குறைய இருக்கலாம். (எனக்கு 59 ) நான் அவரை விட சற்றே பருமனானவன். சட்டையின் மேல் பொத்தான் இரண்டை கழட்டி விட்டிருந்தது. ஒரு காலை அடுத்த இருக்கைவரை நீட்டியிருந்தது, ஒரு கையை முன்னிருக்கை கம்பியிலும் மறு கையை சாய்ந்திருந்த இருக்கையின் கம்பியிலும்...... சுமார் முப்பது நிமிட பயண நேரம் முழுவதும் அவப்போது மூக்கை சொறிவது ஒன்றுதான் அதனிடமிருந்த அசைவு. &&&& நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

வகுப்பறை: எதை அடக்க வேண்டாம்?

வகுப்பறை: எதை அடக்க வேண்டாம்?: எதை அடக்க வேண்டாம்? "சிறுநீரை அடக்க வேண்டாம்.." ஒரு உண்மை சம்பவம்... 15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்...

வகுப்பறை: கரிநாள் என்பது என்ன?

வகுப்பறை: கரிநாள் என்பது என்ன?: கரிநாள் என்பது என்ன? ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது, அ...

திங்கள், 20 மார்ச், 2017

வகுப்பறை: நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி? இதைப் படியுங...

வகுப்பறை: நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி? இதைப் படியுங...: நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி?    இதைப் படியுங்கள் தெரியும்!!!! இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள். இதைப் படிப்பதால், உங்க...

சனி, 11 மார்ச், 2017

Bank

ஹலோ,பொன்னுசாமியா?
ஆமாங்க.
பேங்க்லேர்ந்து தபால் வந்த்தா?
ஆமாங்க ஒரு கடுதாசி ஒன்னு போன வாரம் வந்திச்சி.
என்னன்னு பார்த்தீங்களா?
ஆமா ஏதோ அபராதம் கட்டணுமனு இருந்த்து.
அப்புறம் ஏன் வர்ல?
எனக்குதான் பேங்க்ல கணக்கே இல்லையே,
கணக்கு இல்லையா? அப்ப அதுக்கும் சேர்த்து அபராதம் கட்டணும்.
என்ன சொல்றீங்க?
ஆமாய்யா,கணக்கு இருந்தா குறைந்த அளவு தொகை கணக்குல வெச்சிருக்கணும்.இல்லாட்டி மாதம் ஒரு தடவையாவது வந்துட்டு போகனும்,தவறினா அபராதம் கட்டனும்.
என்னங்க இது அநியாயமாஇருக்கு?
அப்புறம் எப்படி செல்லையாவுக்கும்,கும்பானிகளுக்கும் கடன் கொடுக்கறது?உஷார்,.......

திங்கள், 9 ஜனவரி, 2017

வளரும் கவிதை: மின்னூலாக்க வழிகாட்டு முகாம் எழுத்தாளர்களுக்கு ஒர...

வளரும் கவிதை: மின்னூலாக்க வழிகாட்டு முகாம் எழுத்தாளர்களுக்கு ஒர...: புதுக்கோட்டை  கணினித் தமிழ்ச்சங்கத்தின் அடுத்த முயற்சி!  “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இவ்வுலகில், மாறிவரும் நவீன ஊடகவுலகம் முழுவதும் ...