சனி, 31 அக்டோபர், 2015

வகுப்பறை: இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச்...

வகுப்பறை: இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச்...: இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம்  என்று எதற்காகச் சொன்னார் அவர்? திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மத...

வகுப்பறை: அவ்வப்போது எதை அணிய வேண்டும்?

வகுப்பறை: அவ்வப்போது எதை அணிய வேண்டும்?: அவ்வப்போது எதை அணிய வேண்டும்? அவ்வப்போது எதை அணிய வேண்டும்?  வான்ஹுசைன் சட்டை, கே.ஜி டெனிம் பேன்ட். 4 சவரன் தங்கத்தில் கைக்கு ஒரு ப...

வெள்ளி, 16 அக்டோபர், 2015

நான் ஒரு முட்டாளுங்க

ஆமாங்க நான் ஒரு முட்டாள் தானுங்க ,
தமிழகத்தின் மருத்துவ மாநகரத்தில் உள்ள ஒரு பெயர் பெற்ற மருத்துவ மனையில் இரண்டரை வருடங்களுக்கு முன் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் .அதெல்லாம் புத்திசாலித்தனம் தான் .
ஒன்றும் பிரச்சினை இல்லைதான் ,இருந்தாலும் ஒரு முறை பரிசோதனை செய்துகொண்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று நேற்று போயிருந்தேன் .அதுகூட புத்திசாலித்தனம் தான் .
பதிவு செய்து காத்திருந்து அழைத்து பணம் கட்டிட்டு  எக்ஸ் ரே எடுத்து வாங்க என்று மருத்துவரின் பரிந்துரை படிவம் கொடுத்தார்கள் .அருகிலுள்ள பணம் செலுத்துமிடத்தில் பணம் செலுத்தியவுடன் ரசீது கொடுத்தார்கள் .அதை பார்த்த எனக்கு குழப்பம் .ஏனென்றால் எனக்கு வலது இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் .ஆனால் ரசீதில் இரண்டு பக்க இடுப்பு எலும்புக்கும் படம் எடுக்க வசூலிக்கப்பட்டிருந்தது .
நான் முட்டாளாக வேண்டிய தருணம் அப்போது ஆரம்பம் .செவிலியரிடம் எனக்கு வலது பக்கம்தானே சிகிச்சை செய்யப்பட்டது ,இரண்டு பக்கமும் எதற்கு எடுக்கவேண்டும் என்று கேட்டேன் .அவர் டாக்டர்தான் எழுதியிருக்கிறார் அவரிடம்தான் கேட்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் .நான் பரிந்துரை படிவத்தை மீண்டும் பார்த்தேன் .அதில் வலது இடுப்பு என்று மூலவர் (பெரிய டாக்டர் )எழுதியிருக்க இடைப்பட்ட இளைய டாக்டர் அதில் திருத்தம் செய்திருக்கிறார் என்றும் தெரிந்தது .செவிலியரிடம் டாக்டரை பார்க்கவேண்டும் என்றேன் .அவரும் இளைய மருத்துவரிடம் அழைத்துசென்றார் .டாக்டரிடம் எதற்கு தேவையில்லாமல் இரண்டு பக்கமும் எடுக்கவேண்டும் என்று கேட்டேன் .தேவையா இல்லையா என்று எங்களுக்கு தெரியும் ,தேவையில்லை என்று உங்களுக்கு தோன்றினால் ஒருபக்கம் மட்டும் எடுத்துகொள்ளுங்கள் என்றார் .சரி ஒரு பக்கம் போதும் என்று பணம் கட்டிய இடத்தில் ரசீதை கொடுத்தபோது கிடைத்த பதில்தான் என்னை முட்டாள் ஆக்கியது .இரண்டு படம் எடுக்கவும் ,ஒரு படம் எடுக்கவும் ஒரே கட்டணம்தான் என்று ரசீதில் இரண்டு பக்கம் என்பதை வலது பக்கம் என்று மட்டும் திருத்தி கொடுத்துவிட்டார்கள் .
அப்புறம் வேறு ஏதாவது பேச முடியுமா ?? பேசாமல் இரண்டு படம் எடுத்திருக்கலாம் ...

புதன், 7 அக்டோபர், 2015

புறப்படுவோம் புதுக்கோட்டை நோக்கி! வாரீர்! வாரீர்!! | அகச் சிவப்புத் தமிழ்

புறப்படுவோம் புதுக்கோட்டை நோக்கி! வாரீர்! வாரீர்!! | அகச் சிவப்புத் தமிழ்

பதிவர் சந்திப்பு ....

அல்லாருக்கும் வணக்கங்க ,
புதுகை பதிவர் சந்திப்பு பற்றி பதிவுலகில் இருக்கற அல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ...
அதுக்காக எத்தன ஜாம்பவான்கள் எத்தன நாளா எவ்ளோ கஷ்டப்பட்டு என்னெனவோ வேலைகள் செஞ்சுகிட்டு இருக்காங்க ,
நம்ம வீடு விசேஷம் கூப்டா என்ன கூப்டாட்டி என்ன ?சும்மா போய் பாக்கலாம் ..அப்பத்தான் நமக்கும் ஒரு ஈடுபாடு வரும்கறேன் ...
என்ன அல்லாரும் போலாமா ?