வெள்ளி, 1 மார்ச், 2024

இளைய தலைமுறை

சில இளைஞர்களின் வளர்ப்பு எப்படி என்று புகையிரதம் போன்ற பொது இடங்களில் அதுவும் ஐந்தாறு பேர்கள் சேர்ந்து கொண்டால் அவ்வளவுதான்.மற்றவர்களின் சௌகர்யம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்போல.இரவு பதினொரு மணி பத்து நிமிடத்திற்கு திருநெல்வேலியிலிந்து கோவைக்கு ரயில்ஏறினோம் எனக்கும் மனைவிக்கும் மூத்தோர்ஒதுக்கீடில் இரண்டு லோயர்பர்த்கள்.மீதி ஆறிலும் இன்றைய இளைய தலைமுறை உதாரண புருஷர்கள்.வண்டிஏறியதிலிருந்து கரூர் வரை அதாவது காலை நான்கு மணிவரை அவர்களும் தூங்கவில்லை எங்களையும்தூங்கவிடவில்லை போறுத்துப்பார்த்து புகாரும் கொடுத்துப்பார்த்தேன்.இளைய தலைமுறையே வென்றது.
எப்போதாவதுதான் வெளியே வருகிறோம் பேசாமல் எப்படி என்கிறார்கள்.
இறைவா....