புதன், 14 ஜனவரி, 2015

                   * பொங்கல் நினைவுகள் *
அரை டிராயர் காலம்தான் ஆனாலும் அந்த நினைவுகள் ...
நான் தினமும் மேய்க்கும் மாட்டை மட்டும் நான் கழுவேவேன்
தம்பி மேய்க்கும் மாட்டை நான் கழுவ மாட்டேன் என்பதில்
ஆரமிபிக்கும் பொங்கல் கலகலப்பு .கொம்புகளுக்கு சாயம்
பூசுவதில் ,பலூன் ஊதி கட்டுவதில் ,புதிய கயிறு கட்டுவதில் ,
தொடர்ந்து பூஜை முடிந்ததும் யார் மாட்டுக்கு முதலில்
பொங்கல் ஊட்டுவது என்று வளர்ந்து மாலையில் ஊரில் உள்ள அனைத்து மாடுகளுடன் ஊர்வலம் விடுவதில் தம்பியுடன் ,நண்பர்களுடன்
போட்டி என்று முடிந்து இரவில் அம்மாவின் அருகில் படுத்துக்கொண்டு
அன்றைய பொங்கல் நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தபடுவதில்
நல்லவேளை அப்பொழுது தொல்லைகாட்சி பெட்டிகள் இல்லை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக